செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்!…

நடிகை ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்!…

நடிகை ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகை ஹன்சிகா படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்து சென்னை வந்தால் தங்குவது அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஹோட்டலில்தான். சில நேரங்களில் வேளச்சேரியில் உள்ள ஹயாத் ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலேயே செம காஸ்ட்லியான ஹோட்டல்கள் இவை இரண்டும்தான் என்று சொல்லப்படுகிறது. மற்ற ஹோட்டல்களில் தங்கச் சொன்னால் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்து மறுத்து விடுகிறாராம் ஹன்சிகா.

அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சனையை உடனே எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்தப் படத்தின் ஹீரோவுக்கே போன் போட்டு சொல்கிறாராம். ஹன்சிகாவை சமாதானப்படுத்தும் ஹீரோக்கள் சற்று நேரத்தில் தயாரிப்பாளருக்கு போன் போட்டு ஹன்சிகாவுக்கு அவர் கேட்டபடி ஹயாத்திலேயே ரூம் போடுங்கள் என்று கட்டளையிடுகிறார்களாம். ஹீரோக்களே சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் ஹயாத்தில் ரூம் புக் பண்ணிக் கொடுக்கிறார்கள். மற்ற நட்சத்திர ஹோட்டல்களைவிட இங்கே பில் அதிகம் என்பதால் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களுக்கு தண்டச்செலவு. ஹோட்டல் பில் செலவு மட்டுமின்றி, இன்னொரு வகையிலும் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறாராம் ஹன்சிகா.

காலை, இரவு உணவை ஹயாத் ஹோட்டலில் சாப்பிடுவதோடு, படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது மதியச்சாப்பாட்டுக்கான ஐட்டங்களையும் கையோடு பார்சலில் எடுத்துப்போகிறாராம். சாப்பாடு மட்டுமின்றி, இடையிடையே குடிக்க சூப், ஜூஸ், அவ்வப்போது கொறிக்க ஸ்னாக்ஸ் என்று மினி சாப்பாட்டுக்கடையையே ஹாட்பேக்கில் பார்சல் கட்டி எடுத்துப்போகிறாராம் ஹன்ஸிகா. இப்படி ஹன்சிகா எடுத்துச் செல்லும் பார்சல் சாப்பாடுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?… ஒரு நாள் சாப்பாட்டுக்கு சுமார் 20 ஆயிரம் மொய் எழுதுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி