செய்திகள்,திரையுலகம் விருது விழாவில் ரசிகர்களை கௌரவப்படுத்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

விருது விழாவில் ரசிகர்களை கௌரவப்படுத்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

விருது விழாவில் ரசிகர்களை கௌரவப்படுத்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சிறந்த திரையுலக பிரமுகர்’ விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனால் வழங்கப்பட்டது.

அப்போது ரஜினி மிகவும் பணிவுடன் அமிதாப் பச்சனிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். பின் பேசிய ரஜினி, நான் விருது பெறவே வந்தேன். பேசுவதற்காக வரவில்லை. என்னை கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி.இந்த விருதை என் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி