செய்திகள்,திரையுலகம் பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…

பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…

பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!… post thumbnail image
சென்னை:-நடிகை ஸ்ரேயா நடிப்பில் இம்மாதம் 28ம் தேதி திரைக்கு வரும் படம் என் பெயர் பவித்ரா. இந்த படத்தில் பவித்ரா என்கிற டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா. அதோடு முதன்முறையாக ஒரு புரட்சிகரமான வேடத்தில் தனது இன்னொரு முகத்தை காண்பித்திருக்கிறார் அவர். அதாவது ஏழை பெண்ணான ஸ்ரேயா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அம்மாவின் மருத்துவ செலவுக்கு பணத்திற்கு அலையும்போது, சந்தர்ப்பவசத்தால் விலைமாதுவாக மாறுகிறாராம்.

அதன்பிறகு, விலைமாதுவாகவே தனது வாழ்க்கையை தொடரும் ஸ்ரேயா, அதன்மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அனாதை இல்லங்களுக்கு நன்கொடை வழங்குகிறாராம். ஒரு கட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாராம் ஸ்ரேயா. அப்போது, நாட்டில் பெண்களுக்கு இழைக்கபபட்டு வரும் கொடுமைகளைக்கண்டு கொதிக்கும் அவர், பெண்களின் நலனுக்காக ஒரு அமைச்சகம் வேண்டும். அந்த அமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பாலியல் போன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பாற்றுவதற்காகவும் பாடுபட வேண்டும் என்று குரல் கொடுக்கிறாராம். இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் வித்யாசாகர் கூறுகையில்,

இதுவரை பெரும்பாலான படங்களில் கிளாமர் வேடங்களிலேயே நடித்துள்ள ஸ்ரேயா, ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில்தான் இந்த கதையை அவரிடம் சொன்னேன். கதை கேட்ட அவர் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி விட்டார். அதனால் முழு ஈடுபாடு காட்டி நடித்திருக்கும் ஸ்ரேயா, சில காட்சிகளில் அதிக உணர்ச்சிவசப்பட்டு நடித்தார். அந்த வகையில் ஸ்ரேயாவின் அதிரடியான நடிப்பில் என் பெயர் பவித்ரா படம் பிரமாதமாக வந்திருக்கிறது. மேலும், விலைமாது என்றபோதும் பெட்ரூம் காட்சிகளில் டீசன்டாகவே நடித்திருககிறார். அந்த காட்சிகளை ரொமான்டிக்காக இயல்புத்தன்மை மாறாமல் படம் பிடித்திருக்கிறேன். அதனால் ஸ்ரேயா நடித்த படங்களில் இந்த படம் அனைத்துதரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்துவதாக இருக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி