செய்திகள்,திரையுலகம் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…

மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…

மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!… post thumbnail image
சென்னை:-அரசியல் சுனாமியில் சிக்கி சிலகாலம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, யுவராஜ் இயக்கிய தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலு ஹீரோ வேஷத்தை கலைத்துவிட்டு மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசுவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அவரோ நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருந்தார். அதன்படி மீண்டும் யுவராஜ் இயக்கத்தில், இப்போது ஒருபடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு எலி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்று கூறி வந்தவர் இப்போது காமெடியனாகவும் களம் இறங்கியுள்ளார்.

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக இருந்த குமாரய்யா என்பவர், விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குமாரய்யா சொன்ன கதை பிடித்துப்போக இப்படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஆக, வடிவேலு மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி