செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…

நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…

நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷாவுக்கும், சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

திரிஷா ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கன்னட நடிகை ராகினி திவேதியுடன் ராணா நெருங்கி பழகியதாகவும், எனவே அவரை விட்டு திரிஷா விலகியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இதை தொடர்ந்து திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக செய்திகள் பரவின.
ஆனால் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று டுவிட்டரில் திரிஷா தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை.

என் திருமண நிச்சயதார்த்தம் என்பது எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். அதை சந்தோஷமாக அறிவிக்கும் முதல் நாளாக நான் இருப்பேன். பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறன் என்றார்.திரிஷா இவ்வாறு கூறிய உடனேயே லட்சுமிராய் தனது டுவிட்டரில் நடந்ததை ஏன் மறைக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.திரிஷாவுக்கும், லட்சுமி ராய்க்கும் நீண்ட நாட்களாக மோதல் உள்ளது. ‘மங்காத்தா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இருந்து இந்த சண்டை தொடர்கிறது. எனவே தான் அவர் திரிஷாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்கின்றனர். திரிஷா, வருண்மணியன் தொடர்பு லட்சுமிராய்க்கு நன்றாக தெரியும் என்றும், லட்சுமி ராய்க்கும் வருண் மணியன் நண்பர்தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி