செய்திகள்,திரையுலகம் வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…

வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…

வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நான் ஈ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திரக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டு கோடை விடுமுறை சமயத்திலும், இரண்டாம் பாகம் 2015ம் ஆண்டின் கடைசியிலும் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான பிரமோஷனை இயக்குனர் ராஜமௌலி புதுப்புது முறைகளில் செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக தற்போது ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள வாட்ஸ்-அப் அப்ளிகேஷன் மூலம் படத்தை பிரமோஷன் செய்ய ஆரம்பித்திக்கிறார்கள். +918096755222 என்ற எண்ணை நமது வாட்ஸ்-அப்பில் சேர்த்துக் கொண்டால் படம் பற்றிய பல தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அடிக்கடி அப்டேட் செய்து கொண்டேயிருப்பார்களாம். கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்கள், யு டியூப் போன்றவற்றின் மூலம் படங்களை பிரமோஷன் செய்து வந்ததின் அடுத்த கட்டமாக தற்போது வாட்ஸ்-அப் அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி