செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்!…

பிரபல இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்!…

பிரபல இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்!… post thumbnail image
சென்னை:-1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர் சி.ருத்ரைய்யா. இவரது முதல் படம் ‘அவள் அப்படித்தான்’. முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது.

இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய ‘கிராமத்து அத்தியாயம்’ என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.

சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ருத்ரய்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. ருத்ரய்யாவின் இறுதிச்சடங்கு வியாழன் அன்று நடைபெற இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி