செய்திகள் நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…

நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…

நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் கிராமத்தில் நான்கு கைகள் மற்றும் கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் இது கடவுளின் குழந்தை என்று கூறி, குழந்தையை பார்ப்பதற்காக சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறிவருகின்றனர். கடவுளின் அவதாரத்தில் தான் பல கைகளும், கால்களும் இருக்கும் என்று நம்பப்படுவதால், இக்குழந்தையும் கடவுளின் குழந்தை என்று அப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. பிறப்பு குறைபாடு காரணமாக குழந்தை இவ்வாறு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதும், இக்குழந்தையின் குடும்பத்தினர் அதை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

பருய்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான சுக்கா ராவ் இது குறித்து கூறுகையில், குழந்தைக்கு நான்கு கைகள் மற்றும் கால்கள் இருப்பதாக செய்தி வந்தவுடன் முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால் குழந்தையை நேரில் பார்த்தபோது அதைக் கண்டு வியப்படைந்தோம் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி