செய்திகள்,திரையுலகம் 2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..

2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..

2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!.. post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய், ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்க உள்ளாராம். இந்தப் படத்திற்காக கதை விவாதம் ஏற்கெனவே நடந்து முடிந்து உள்ளது. நயன்தாராதான் அநேகமாக நாயகியாக நடிப்பார் என்கிறார்கள். அவரைப் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ பெரும் முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், விஜய்யுடன் நயன்தாரா ஜோடியாக நடித்த வில்லு படம் தோல்வியடைந்ததால், அது நடக்குமா எனத் தெரியவில்லை என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தற்போதைய படத்தின் படப்பிடிப்பு முடிவடைய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள். அதன் பின்தான் அட்லீ இயக்கும் படம் ஆரம்பமாகுமாம். இந்தப் படத்தை 2016 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி