செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க பகுதி அறிக்கையை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது.

அதில் பி.சி.சி.ஐ தலைவராக உள்ள சீனிவாசன் மேட்ச் பிக்சில் ஈடுபடவில்லை என முத்கல் குழு கூறியுள்ளது. ஆனால் அதே சமயம் சீனிவாசன், ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதன் நிர்வாக குழுவினர் அனைவருக்கும் மேட்ச் பிக்சிங் நடைபெறுவது தெரிந்திருந்தது எனவும், அதை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முத்கல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முத்கல் குழு அறிக்கை வெளியான பின் கருத்து தெரிவித்த சீனிவாசன், இதன் மூலம் தான் நிம்மதி அடைந்திருப்பதாகவும், அதே சமயம் அறிக்கையின் முழு விவரங்களை பார்த்த பின் தன்னால் கருத்து கூற முடியும் எனவும் தெரிவித்தார்.வரும் 20ம் தேதி பி.சி.சி.ஐ.-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேட்ச் பிக்சிங்கில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை என்று தெரியவந்துள்ளதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி