இந்த சரித்திர படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இதுவரை தெலுங்கில உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி படத்தை விடவும், பாகுபாலியை பிரமாண்டமாக இயக்க வேண்டும் என்று செயல்பட்டு வந்த ராஜமவுலி, சமீபத்தில் ‘ஐ’ படத்தின் டீசர்களைப் பார்த்ததில் இருந்து மிரண்டு போயிருக்கிறார்.
அதையடுத்து, இந்த அளவுக்கு பிரமாண்டமாக, பிரமிக்கத்தக்க வகையில் ஷங்கரை தவிர வேறு யாராலும் படம் இயக்க முடியாது என்றும் கருத்து கூறியிருந்தார். ஆனபோதும், இப்போது அவருக்கு ஐ படத்துக்கு இணையாக பாகுபலி படத்தையும் பிரமாண்டமாக இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், தனது ஸ்கிரிபட்டில் சில திருத்தங்களை செய்துள்ள ராஜமவுலி, படத்தின் பட்ஜெட்டை உயர்த்தி, இன்னும் கூடுதலான பிரமாண்டங்களை புகுத்தி வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி