செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகை குஷ்புவை அறிமுகப்படுத்திய பாலிவுட் டைரக்டர் ரவிசோப்ரா மரணம்!…

நடிகை குஷ்புவை அறிமுகப்படுத்திய பாலிவுட் டைரக்டர் ரவிசோப்ரா மரணம்!…

நடிகை குஷ்புவை அறிமுகப்படுத்திய பாலிவுட் டைரக்டர் ரவிசோப்ரா மரணம்!… post thumbnail image
மும்பை:-மகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா. இவர் பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன் ஆவார்.

தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். நாட்டில் தூர்தர்ஷன் அறிமுகமாகி அதன் தாக்கம் உச்ச கட்டத்தில் இருந்த போது மகாபாரதம் கதையை டி.வி. சீரியலாக தயாரித்து இயக்கி ஒளிபரப்பினார். இந்த தொடர் 1988–ம் ஆண்டு முதல் 1990–ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டப்பிங் செய்யப்படாத அந்த கால கட்டத்தில் இந்தியில் மகாபாரதம் அனைத்து மொழி பேசும் மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இயக்கி இருந்தார்.

2006–ம் ஆண்டு தந்தை பி.ஆர்.சோப்ரா மரணம் அடைந்த பின்பு ரவிசோப்ரா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி பல படங்களை இயக்கினார். ரவிசோப்ரா கடந்த 2012–ம் ஆண்டு முதல் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல தடவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 68 வயதான ரவிசோப்ராவுக்கு நுரையீரலில் புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மும்பை திரும்பினார். அதன் பிறகு மீண்டும் மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அவரது உடல் தகனம் மும்பையில் நேற்று நடந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி