செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!… post thumbnail image
கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

மேலும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
ரோகித்சர்மா 173 பந்துகளில் 33 பவுண்டரி, 9 சிக்சருடன் 264 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி