சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளிவந்ததில் இருந்து முருகதாஸ் மீது மறைமுக தாக்குதல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது என்னுடைய கதை என்றும், இது இந்த படத்தின் காப்பி எனவும் பல குரூப் உருவாகியுள்ளது. தற்போது இதெல்லாம் போதாது என்று இப்படத்தில் ஒரு பத்திரிக்கையை கிண்டல் செய்வது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
மக்கள் தங்கள் குறை தீர்க்க அங்கு வரும் போது, அந்த பத்திரிக்கையாளர் அலட்சியமாக பேசுவது போல் அந்த காட்சி வரும். இதை பார்த்த அந்த பத்திரிக்கை நிறுவனம் முருகதாஸை ஒரு பிடிபிடிக்க, என்னை மன்னித்து விடுங்கள், அன்று என் உதவி இயக்குனர் தான் அந்த காட்சியை எடுத்தார் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி