செய்திகள்,விளையாட்டு தந்தையை பற்றி குறை சொன்னதால் சக மாணவரை தாக்கிய தெண்டுல்கரின் மகன்!…

தந்தையை பற்றி குறை சொன்னதால் சக மாணவரை தாக்கிய தெண்டுல்கரின் மகன்!…

தந்தையை பற்றி குறை சொன்னதால் சக மாணவரை தாக்கிய தெண்டுல்கரின் மகன்!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு பகுதியில், 2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. அந்த சமயத்தில் எனது மகன் அர்ஜூனுக்கு வயது 7.

அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் சக மாணவர் ஒருவர், ‘உலக கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டது. அதற்கு உனது தந்தை டக்-அவுட் ஆனது தான் காரணம்’ என்று சொல்லி இருக்கிறான். இதனால் கோபத்தில் எனது மகன் அந்த மாணவனை அடித்து குத்தியதுடன், இனி மேல் எனது தந்தையை பற்றி ஒரு வார்த்தையும் பேசாதே என்று எச்சரித்து இருக்கிறான்.

இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டதும், இது போன்று யாரும் சொன்னால் அதை கண்டுகொள்ளாமல், விட்டுவிடவேண்டும் என்று அவனுக்கு அறிவுரை வழங்கினேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி