செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத்தை அசரவைத்த கௌதம் மேனன் கிளைமேக்ஸ்!…

நடிகர் அஜீத்தை அசரவைத்த கௌதம் மேனன் கிளைமேக்ஸ்!…

நடிகர் அஜீத்தை அசரவைத்த கௌதம் மேனன் கிளைமேக்ஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ளன. முக்கியமான கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்க வேண்டியது உள்ளதாம்.

வழக்கமாக தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களிடம் கதை சொல்ல மாட்டார் கௌதம் மேனன். ஆனால் அஜீத்திடம் ஆரம்பத்திலேயே கதையை சொல்லிவிட்டாராம் கௌதம் மேனன்.
ஆனால் அதிலும் படத்தின் கிளைமேக்ஸை அஜீத்திடம் சொல்ல வில்லையாம். அஜீத் கேட்ட போது போக போக சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமாக்ஸை சமீபத்தில் தான் அஜீத்திடம் சொன்னாராம். அது அஜீத்துக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம். கிளைமேக்ஸ் காட்சிகள் பற்றி வெளியில் தெரிய கூடாது என்பதற்காக மிகவும் சீக்ரெட்டாக படமாக்கி வருகிறார் கௌதம் மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி