செய்திகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!… post thumbnail image
அஜ்மிர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்ட இரு வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் புஷ்கர் பகுதியில் இருந்து ராட்சத பலூனில் ஏறி பயணம் செய்தனர். அவர்களுடன் பலூன் ஆப்பரேட்டர் ஒருவரும் சென்றிருந்தார்.

வானில் பறந்துகொண்டிருந்த அந்த பலூன் பலமாக காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த பலூன் அஜ்மிர் சிறையினுள் தரையிறங்கியது. சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த வினோத சம்பவத்தால் சிறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சிறைக்குள் தரையிறங்கிய ராட்சத பலூனில் பயணித்த பெண்களை ஒரு மணி நேரம் விசாரித்த பின் காவல் துறையினர் விடுவித்தனர்.

சிறை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக பலூன் ஆப்பரேட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவரின் உரிமத்தை நகர நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி