செய்திகள்,திரையுலகம் வெற்றி கொண்டாட்டத்தில் ‘கத்தி’ படக்குழுவினர்!…

வெற்றி கொண்டாட்டத்தில் ‘கத்தி’ படக்குழுவினர்!…

வெற்றி கொண்டாட்டத்தில் ‘கத்தி’ படக்குழுவினர்!… post thumbnail image
சென்னை:-பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று வெற்றிகரமாக வெளியான ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும் உலகமெங்கும் 71.05 கோடி வசூலித்ததாக ‘கத்தி’யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் மூலம் அறிவிக்கப்பட்டது. தற்போது உலகமெங்கும் 100.7 கோடி வசூலித்திருப்பதாக அனிருத் அறிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி