செய்திகள்,திரையுலகம் சூறாவளியில் மாட்டிக் கொண்ட ‘பென்சில்’ படக்குழுவினர்!…

சூறாவளியில் மாட்டிக் கொண்ட ‘பென்சில்’ படக்குழுவினர்!…

சூறாவளியில் மாட்டிக் கொண்ட ‘பென்சில்’ படக்குழுவினர்!… post thumbnail image
சென்னை:-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிகராக அறிமுகமாகும் படம் பென்சில். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் அண்மையில் நடைபெற்றது. ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது.

பிராண வாயு பற்றாக்குறையால் கதாநாயகியின் அம்மா மூச்சுத் திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்துள்ளார். அதோடு மற்றவர்களும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த பிரச்சனையிலும் இயக்குனர் படப்பிடிப்பை முடித்துள்ளார். அதோடு பென்சில் படக்குழுவினர் இன்று சென்னை திரும்புகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி