செய்திகள்,திரையுலகம் கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…

கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…

கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!… post thumbnail image
சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்து வாலிபராஜா என்ற படம் மட்டுமே கிடைத்தது.

ஆனால், அந்த படமும் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில், இன்னமும் திரைக்கு வருவதற்கான அறிகுறிகளே இல்லை. அதனால் இந்த படம் வந்தாலாவது ஒரு சேஞ்ச் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த விசாகாவுக்கு மீண்டும் ஏமாற்றம்தான். இந்நிலையில், விமல் -பிரியாஆனந்துடன் இணைந்து விசாகா நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் நவம்பர் 7ம் தி திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இந்த படம் திரைக்கு வருவதினால் விசாகாசிங்கிற்கு பெரிய மகிழ்ச்சி ஒன்றும் இல்லையாம். காரணம், இந்த படத்தில் ப்ரியா ஆனந்த்தான் மெயின் ஹீரோயினியாக நடித்திருக்கிறாராம். விசாகாவிற்கு ஒரு சிறிய வேடம்தான். அதைகூட ஒரு கேரக்டர் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இந்த படம் வந்து தனது ஹீரோயின் இமேஜை காலி பண்ணி விடுமோ என்று உள்ளூர கலங்கிப் போயிருக்கிறார் லட்டு விசாகாசிங்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி