செய்திகள்,திரையுலகம் எந்தப்படம் முதலில் வரும்?… மேலும் குழப்பிய நடிகர் கமல்ஹாசன்!…

எந்தப்படம் முதலில் வரும்?… மேலும் குழப்பிய நடிகர் கமல்ஹாசன்!…

எந்தப்படம் முதலில் வரும்?… மேலும் குழப்பிய நடிகர் கமல்ஹாசன்!… post thumbnail image
சென்னை:-விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், படங்களில் நடித்து முடித்துவிட்ட கமல் தற்போது பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். கமலின் 3 படங்களில் எந்தப் படம் முதலில் ரிலீஸாகும்?… இந்தக் கேள்வியை கமலிடமே ஒரு டிவி சேனல் ஒன்று கேட்க… என் கணிப்பில் உத்தம வில்லன் திரைப்படம் முதலில் வருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தயாரிப்பாளர்கள் பேசி முடிவெடுத்து இதில் வேறெதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனாலும் உத்தம வில்லன், பாபநாசம் படங்களின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படங்கள் ரெடியாக இருக்கின்றன. விஸ்வரூபம் 2 படத்திற்கு மட்டுமே இன்னும் வேலை மிச்சமிருக்கிறது. பாக்கி 2 படங்களுமே ரெடியாகத்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எனது 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் ஒரு நிகழ்வாக நான் பார்க்கிறேன். என்று கமல் பதிலளித்திருக்கிறார். கமலின் பதில் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஏற்கனவே நிலவிய குழப்பத்தைவிட மேலும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டதாகவே தோன்றுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி