மேலும், அதிக முறை பணம் எடுப்பதை அனுமதிக்கும் விஷயத்தில் வங்கிகள் தங்கள் விருப்பம்போல் செயல்படலாம் என்றும் அந்த நிபந்தனையில் கூறப்பட்டு இருந்தது.இந்த புதிய நடைமுறை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய 6 பெருநகரங்களில் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.எனினும், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோடக் மகிந்திரா, யெஸ் ஆகிய வங்கிகள் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர் பணம் எடுப்பது தொடர்பான முடிவில் தங்களது வழக்கமான நிலையையே தொடருகின்றன.
மேலும் கோடக் மகிந்திரா மற்றும் யெஸ் ஆகிய வங்கிகள், தங்களது வங்கிகளில் அதிக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பிற ஏ.டி.எம். மையங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள அனுமதித்து உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு குறித்து பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்கள் மீண்டும் வங்கிகளுக்கு அலைந்து சென்று பணம் எடுக்கும் நிலையைத்தான் உருவாக்கும் என்றார்.
இதனால் அதிக முறை பணம் எடுப்பதற்காக பிடித்தம் செய்யப்படும் தலா ரூ.20-ஐ விட வங்கிகளுக்கு இது இன்னும் கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி