செய்திகள்,திரையுலகம் நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!… post thumbnail image
சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும் என்று தன்னை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறார். காரணம், இந்த படத்தில் மனதை தொடும் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு மீராநந்தனுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாம்.

அவரிடத்தில், சரத்குமார் போன்ற வயதான ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்களே. அடுத்து இளவட்ட ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?… என்று கேட்டால், இப்போதெல்லாம் அப்படி யாரும் பார்ப்பதில்லை. ஏற்கனவே நான் மலையாளத்தில் லோக்பால் என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். ஆனால் அதையடுத்தும், பிருத்விராஜ், பஹத்பாசில் என இளவட்ட நடிகர்களுடனும் நடித்துதான் வருகிறேன். அதனால், மலையாளத்தை போலவே தமிழிலும என்னை யாரும் ஓரங்கட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மீராநந்தன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி