செய்திகள் உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…

உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…

உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!… post thumbnail image
அலபாமா:-மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின் ஹெண்டர்சன் எனும் நபரை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக காவல் துறையினர் கைது செய்ய வந்தனர். அப்போது காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய எட்வினை தொடர்ந்து செல்லும்படி காவல் துறையினர் எட்வின் வளர்த்து வந்த நாய்க்கு கட்டளையிட்டனர்.

உடனடியாக எட்வினை தொடர்ந்து சென்ற வளர்ப்பு நாய் போலீசார் அவரை கைது செய்ய உதவி புரிந்தது. இச்சம்பவம் குறித்து தெரிவித்த காவல் துறை செய்தி தொடர்பாளர், ஹென்டர்சன் மீது காவல் துறையினருக்கு கீழ்படியாதது, போதை மருந்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி