செய்திகள்,திரையுலகம் இடைவெளியை குறைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

இடைவெளியை குறைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

இடைவெளியை குறைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தற்போது புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், வன்மம், மெல்லிசை, இடம்பொருள் ஏவல், நானும் ரெளடிதான், திருடன் போலீஸ் என பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும், உடனடியாக வெளியாகும் என அவர் எதிர்பார்த்த, திருடன் போலீஸ், வன்மம் படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாததால் வெளிவர தாமதமாகி வருகின்றன.

இதனால் தனக்கும், ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிவிடும் என்று கருதும் விஜய் சேதுபதி, தற்போது தான் தயாரித்து முதிர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார். டிசம்பரில் அப்படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
இந்த படத்தில் தனது கெட்டப் பற்றி விஜய் சேதுபதி விடுத்துள்ள செய்தியில், பார்க்கத்தான் முதிர்ச்சியான வேடம். ஆனால் அந்த கேரக்டர் செய்யும் விசயங்கள் இளவட்டத்தனமாக இருக்கும்.

குறிப்பாக என் படங்களை தொடர்ந்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு அந்த வேடம் ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். மேலும், இதுவரை நடிப்பதோடு நிறுத்திக்கொண்டு வந்த விஜய்சேதுபதி, இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, வசனங்களையும் தானே எழுத முடிவு செய்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி