செய்திகள்,திரையுலகம் அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…

அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…

அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-சூர்யா-அசின் நடிப்பில் கஜினி படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து இந்தியில் அதே படத்தை அமீர்கானை வைத்து இயக்கியபோது அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த அசினையே அழைத்து சென்றார் அவர். அந்த படம் இந்தியிலும் ஹிட்டடித்ததால் அதன்பிறகு தென்னிந்திய படங்களை ஓரங்கட்டிவிட்டு இந்தியில் முன்னணி நடிகையாகி விட்டார் அசின்.

இப்போது தமிழில் ‘கத்தி’ படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்குகிறாராம். ஆனால் கத்தியை ரீமேக் செய்யவில்லையாம். அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தை சில திருத்தங்களுடன் இயக்கப்போகிறாராம். முக்கியமாக, அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறாராம். அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் அந்த படத்தின் கதையை மாற்றுகிறாராம்.

அதோடு, தனது கத்தி படத்தில் நடித்த சமந்தாவை இந்த முறை அவர் இந்திக்கு கொண்டு செல்லப் போவதில்லையாம். மாறாக, இசையமைப்பாளர் அனிருத்தை கூட்டிச் செல்கிறாராம். அந்த அளவுக்கு கத்தி படத்துக்கு அனிருத் கொடுத்த இசை அவரை வெகுவாக கவர்ந்துள்ளதாம். அதனால் கோலிவுட்டின் கொலவெறி அனிருத், அடுத்து பாலிவுட்டிலும் தனது கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி