செய்திகள்,முதன்மை செய்திகள் சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…

சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…

சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!… post thumbnail image
சண்டிகர்:-அரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. வாராந்திர விடுமுறை முடிந்து, நேற்று காலை வங்கியின் கதவை திறந்துப் பார்த்த ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ள பகுதியின் தரைப்பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திகைத்துப் போயினர்.

உள்ளே இருந்த சுமார் 350 பாதுகாப்பு பெட்டகங்களில் 77 பெட்டகங்கள் உடைத்து, சூறையாடப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த ரொக்கப்பணம், தங்க, வைர நகைகள் கொள்ளைபோய் இருந்தன.
அப்பகுதியை பார்ப்வையிட்ட போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பெட்டக அறையின் அடிப்பகுதியில் இருந்து சுமார் 125 அடி நீளத்துக்கு இரண்டரை அடி சுற்றளவு கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

வெகு நாட்களாக திட்டமிட்டு, இந்த துணிகர கொள்ளை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சூறையாடப்பட்ட 77 பெட்டகங்களில் இருந்த பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?… என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. மிகவும் பழைமையான இந்த வங்கிக் கிளையில் சுமார் 35 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருப்பதாகவும், 125 கோடி ரூபாய் அளவுக்கு நிரந்தர வைப்பு நிதியை இந்த வங்கி நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி