செய்திகள்,விளையாட்டு பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…

பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…

பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!… post thumbnail image
கொல்கத்தா:-பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ‘தொலைநோக்கு திட்டம் 2020’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதையொட்டி பெங்கால் கிரிக்கெட்டின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியும் அவருடன் இணைந்து பணியாற்றுவார். இது பற்றி லட்சுமண் கூறுகையில், இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 30 நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருந்து, இளம் வீரர்களுக்கு எனது ஆலோசனைகளை வழங்குவேன். ரன் குவிப்பதற்கு திறமையுடன் தொழில்நுட்ப அறிவும் தேவை. அதை இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.பெங்கால் கிரிக்கெட் வீரர்களிடம் நிறைய திறமை உண்டு. தங்களது திறமை என்ன? என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவி செய்வதே எனது முதல் இலக்கு என்றார்.லட்சுமண் மேலும் கூறுகையில்,

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்திற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விளையாடியதில், மிகச்சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. எனது சிறந்த ஆட்டங்கள் இங்கு தான் வெளிப்பட்டன. எனவே இங்கு வருகை தருவது எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி