செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கேரளாவில் இறந்த ரசிகருக்காக நடிகர் விஜய்யின் இரங்கல் கடிதம்!…

கேரளாவில் இறந்த ரசிகருக்காக நடிகர் விஜய்யின் இரங்கல் கடிதம்!…

கேரளாவில் இறந்த ரசிகருக்காக நடிகர் விஜய்யின் இரங்கல் கடிதம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் திரையிடப்பட்டு, அங்கு ரசிகர்களாலும் பட வெளியீடு கொண்டாடப்பட்டது. வடக்கஞ்சேரி என்ற ஊரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மிகப் பிரம்மாண்டமான கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயற்சித்த போது, தவறி விழுந்து இறந்தார். கேரளாவில், அதிர்ச்சிகரமான சம்பவமாக நடந்து இந்த மரணத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

தனது ரசிகர் ஒருவரின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அதற்காக அவருடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்றைய கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்மான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது பிரியமாக உள்ள ஒருவரின் இழப்பை ஈடுசெய்யவே முடியாது, அது எப்போதும் எனது இதயத்தில் இருந்து கொண்டேயிருக்கும்.எனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், தீபாவளி போன்ற விழாக்காலங்களில், உங்களது ஆதரவை உங்களது உயிருக்கும் மற்றவர்களது உயிருக்கும் ஆபத்தில்லாமல் தெரிவியுங்கள்.

தகுந்த பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருங்கள், இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தாங்கிக் கொள்ள முடியாத வலிகளை ஏற்படுத்தும். உங்கள் மீதான உங்கள் மரியாதைதான் என் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கான அடையாளமாக இருக்கும், என விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி