செய்திகள்,திரையுலகம் ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான ‘பூஜை’படம்!…

ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான ‘பூஜை’படம்!…

ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான ‘பூஜை’படம்!… post thumbnail image
சென்னை:-தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘கத்தி’ திரைப்படமும், விஷாலின் ‘பூஜை’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதோ அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய்யின் ‘கத்தி’ முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சொல்லும் புள்ளி விவர கணக்கு கூறுகிறது. அதைப்போல விஷாலின் ‘பூஜை’ படமும் முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஷாலின் ‘பூஜை’ தமிழகத்தில் வெளியிட்டதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியிட்டுள்ளனர்.

அங்கே பூஜா என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களை விட ஆந்திரா ரசிகர்களிடையே ‘பூஜா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான நேரடி தெலுங்குப்படங்களைவிட பூஜா படத்தின் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி