அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…

வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…

வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வசித்து வரும் வெள்ளை மாளிகையினுள், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பினை கவனித்து வரும் ”சீக்ரட் சர்வீஸ்” பாதுகாப்பு படையின் தலைவர் ஜூலியா பியர்சன் விமர்சனங்களுக்கு ஆளானார். அவரிடம் எம்.பி.க்கள் குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையினுள் நேற்று மீண்டும் ஒரு ஆசாமி வேலி தாண்டி நுழைந்தார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ”சீக்ரட் சர்வீஸ்” படை நாய்கள் அவரை துரத்திப்பிடித்தன. பின்னர் அவரை ”சீக்ரட் சர்வீஸ்” அதிகாரிகள் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த ஆசாமியின் பெயர் டொமினிக் அதிசன்யா (வயது 23), மேரிலாண்டை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அவர் வெள்ளை மாளிகையினுள் வேலி தாண்டி குதித்ததின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை 90 நிமிடம் மூடப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.ஹர்ரிகேன் மற்றும் ஜோர்டான் என்ற பெயர் கொண்ட இரண்டு நாய்களும் இந்த சம்பவத்தின் போது லேசான சிராய்ப்பு காயங்கள் அடைந்தன.இதன் காரணமாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன என்று ”சீக்ரட் சர்வீஸ்” செய்தி தொடர்பாளர் எட்வின் டோனோவன் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி