செய்திகள்,திரையுலகம் நாய்களுக்காக பட்டாசு வெடிக்காத நடிகை திரிஷா!…

நாய்களுக்காக பட்டாசு வெடிக்காத நடிகை திரிஷா!…

நாய்களுக்காக பட்டாசு வெடிக்காத நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷா செல்ல பிராணிகள் வளர்ப்பதிலும், அதிலும் குறிப்பாக தெரு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளவர். செல்ல நாய்களுக்காக அவர் தீபாவளிக்கு பட்டாசுகூட வெடிப்பதில்லையாம். அவர் கூறியிருப்பதாவது:

பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால் காற்று மாசும், ஒலி மாசும் உண்டாகும். அதோடு என் செல்ல நாய்குட்டிகள் பட்டாசுக்கு பயப்படும். மனிதர்களை விட நாய்களுக்கு செவித் திறன் அதிகம். பட்டாசு சத்தம் நம்மை விட பல மடங்கு சத்தமாக நாய்களுக்கு கேட்கும். பண்டிகை என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

தீபாவளியன்று வீட்டுக்குள்ளேதான் இருப்பேன். செல்ல நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். மாலையில் பட்டாசு சத்தம் குறைந்ததும் தோழிகள் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். என்கிறார் திரிஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி