செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!…

நடிகர் அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!…

நடிகர் அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் முதன்முதலில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து அனைத்து ஹீரோக்களையும் ஆச்சர்யப்படுத்திய அஜீத், அதே பாணியை தொடர்ந்தும் வருகிறார். இந்த நிலையில், சினிமாவில் தனது கவனம் முழுவதுமாக இருந்தாலும் சென்னைக்கு அருகாமையில் படப்பிடிப்பு நடக்கும்போது அவ்வப்போது தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பயணம் மேற்கொள்வதையும் தொடர்ந்து வருகிறார் அஜீத்.

சமீபகாலமாக தான் எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்கு கண்ணில் தென்படும் வித்தியாசமான காட்சிகளை கேமராவில் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார் அஜீத். மரம் செடி கொடிகள் மட்டுமின்றி ஆங்காங்கே காணப்படும் வித்தியாசமான மனிதர்கள், பிராணிகள், பறவைகள் ஆகியவற்றையும் ஆயிரக்கணக்கில் தனது கேமராவிற்குள் பதிவு செய்துள்ளார் அஜீத்.

அப்படி தான் எடுத்ததில் சில அரிய புகைப்படங்களில், ஒரு நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பது, ஒரு மீனவன் ஏரியில் வலை வீசி மீன் பிடிப்பது, ஏரிக்கரையில் ஒருவர் துணி துவைப்பது. பள்ளி குழந்தைகள் கூட்டமாக நிற்பது, ஒரு பெண் தனது குழந்தையை தோளில் போட்டபடி நடந்து வருகிறது உள்பட ஒரு புதுமையான ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் அஜீத். இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து தலயின் திறமையை வியந்து பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி