செய்திகள்,முதன்மை செய்திகள் 5,554 மீட்டர் உயரமான கல்பதரு சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் புதிய உலக சாதனை!…

5,554 மீட்டர் உயரமான கல்பதரு சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் புதிய உலக சாதனை!…

5,554 மீட்டர் உயரமான கல்பதரு சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் புதிய உலக சாதனை!… post thumbnail image
காத்மாண்டு:-நேபாள நாட்டில் உள்ள கல்பதரு மலைச்சிகரம் 5,554 மீட்டர் உயரமானது. அந்த கல்பதரு மலை சிகரத்தில் ஏறி ஒரு இந்திய சிறுவன் உலக சாதனை புரிந்திருக்கிறான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன் தான் இந்த சாதனையை புரிந்துள்ளான்.

இதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான். கடந்த 7ம் தேதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினான். அங்கிருந்து 10 நாட்களில் அவன் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். இடையில் 2 நாள் கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான். இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி