அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!… post thumbnail image
புது டெல்லி:-இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அரியான-மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு தொடர்ந்து கடினமாக முயற்சி செய்வோம், என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி