போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக கமலஹாசன் மூக்கில் ரப்பர் துண்டு ஒன்று வைக்கப்பட்டது. அந்த துண்டு மூக்கின் உள்ளே சென்று விட்டதால் கமலஹாசன் மூச்சு விட முடியாமல் திணறியதோடு அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை தொடுபுழாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூக்கில் இருந்த ரப்பர் துண்டு அகற்றப்பட்டது. சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி