செய்திகள்,திரையுலகம் டிராகுலா ஒரு மர்மம் (2014) திரை விமர்சனம்…

டிராகுலா ஒரு மர்மம் (2014) திரை விமர்சனம்…

டிராகுலா ஒரு மர்மம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
இப்படத்தின் கதை 1942ல் தொடங்குகிறது. துருக்கி சுல்தானின் படையில் சிறுவர் பிரிவில் வீரனாக இருந்த விளாட் சுதந்திரமான டிரான்சில்வேனிய நாட்டின் மன்னன் ஆகிறான். எனினும் சுல்தானுக்கு நன்றி கூறும் விதமாக அவருக்கு வெள்ளிக்காசுகளை கப்பமாக கட்டுகிறான். ஒரு நாள் புதிய சுல்தானான மெஹமத்திடமிருந்து விளாடிற்கு ஓலை ஒன்று வருகிறது. அதில் டிரான்சில்வேனியா நாட்டை சேர்ந்த 10 வயதுடைய 10000 சிறுவர்களை தனது நாட்டின் சிறுவர் அணியில் சேருவதற்கு அனுப்புமாறு கேட்கிறான். இந்த பத்தாயிரம் பேரில் விளாடின் மகனும் அடக்கம். சுல்தானிடமிருந்து தன் மகன் உள்ளிட்ட மற்ற சிறுவர்களை காப்பதற்காக விளாடின் டிராகுலாவாக மாறுகிறான்.

அப்போது தான் தனக்கு மிகுந்த பலம் கிடைக்கும் என அவன் எண்ணுகிறான். இதற்காக உடைந்த பல் மலையினுள் அவன் செல்கிறான். நூறு வருடங்களுக்கு மேலாக அக்குகைக்குள் யாருமே செல்லாத நிலையில் அவன் மட்டும் துணிந்து குகைக்குள் செல்கிறான். அங்கிருந்து அவன் செய்யும் செயல்கள் என்ன? தனது நாட்டு மக்களை அவன் காப்பாற்றினானா? என்பதே மீதி கதை.100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விஷுவல் எபெக்ட் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது. குறிப்பாக டிராகுலாவின் உடலின் மீது சூரிய ஒளி படும்போது அதன் உடலிலுள்ள தசைகள் கீழே விழுவது போன்ற காட்சிகள் அருமையாக உள்ளது. டிராகுலா வேடமேற்ற நாயகன் லூக் இவான்ஸ் (விளாட்) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை வருத்திக்கொண்டு 100 சதவிகித உழைப்பை தந்திருக்கிறார்.

சுல்தானாக வரும் டோமினிக் கூப்பரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். நாயகனின் மனைவியாக வரும் சாரா காடோனுக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. நாயகனின் குழந்தையை பெற்றெடுப்பதோடு அவரது வேலை முடிவடைகிறது. இயக்குனர் கேரி ஷோர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் டிராகுலாவை நேரில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘டிராகுலா ஒரு மர்மம்’ பயம்…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி