செய்திகள்,திரையுலகம் 19 வருடங்களாக ஓடும் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!…

19 வருடங்களாக ஓடும் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!…

19 வருடங்களாக ஓடும் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!… post thumbnail image
மும்பை:-ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான ஹிந்தி படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 19 வருடங்களாக மும்பையிலுள்ள மராத்தா மந்திர் என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக இன்னமும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்திற்கு இப்போது ரசிகர்களின் வருகை குறைந்து விட்டது. எனவே, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டரிலிருந்து எடுத்துவிட அந்த தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மராத்தா மந்திர் தியேட்டர் நிர்வாகத்தை அணுகி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்னும் கொஞ்ச காலம் அந்தப் படத்தை ஓட்ட இப்போது அந்த தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய சினிமா சரித்திரத்திலேயே அனேகமாக உலகசினிமா சரித்திரத்திலேயே ஒரு படம் இத்தனை வருடங்கள் ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஓடுவது இதுவே முதல் முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி