அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது அவர் நாட்டிலும், நாட்டைச்சுற்றிலும் நிலவுகிற பாதுகாப்பு நிலவரம், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத்தக்க அளவிலான தயார் நிலையில் முப்படைகள் இருக்கின்றனவா என்பதை முழுமையாக ஆராய்வார்.

விமானப்படை தளபதி அருப் ராஹா, முப்படைகளின் பொதுவான பிரச்சினைகள் பற்றியும், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கும், கடற்படை தளபதி ஆர்.கே. தொவானும் அண்டை நாடுகளிடம் நமக்கு உள்ள சவால்கள், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துச்சொல்வார்கள்.

ராணுவ தலைமையகத்தில் ‘வார் ரூம்’ என்றழைக்கப்படுகிற போர் அறையில், பிரதமர் பதவி ஏற்ற பிறகு முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிற முழு அளவிலான முதல் ஆலோசனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி