செய்திகள்,திரையுலகம் கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…

கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…

கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!… post thumbnail image
மும்பை:-பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல் நேரடியாக கேரளாவில் திரையிடப்படும். கேரள மக்கள் மூன்றாவது மொழியாக இந்தி படிப்பதால் நேரடி இந்திப் படங்களை பார்ப்பார்கள்.

என்றாலும், இந்திப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் தமிழ் டப் வெர்சனிலும், இந்தி வெர்சனிலும் திரையிடப்படும். அப்படித்தான் திரையிடப்பட்டது ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்த பேங் பேங். இதுவரை இல்லாத அளவிற்கு 105 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கொச்சியில் ரிலீசான முதல் நாள் மட்டும் 40 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது. ஒரு வார முடிவில் கேரளாவில் 4 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பேங் பேங்.

இதுவரை எந்த இந்திப் படமும் படைத்திராத சரித்திர சாதனையாகும். அதோடு மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி, திலீப் குமாரின் சாதனைகளையும் நெருங்கி இருக்கிறது. பேங் பேங். மொத்தம் கேரளாவில் 10 கோடி வரை பேங் பேங் வசூலிக்கும் என்கிறார்கள். கேரள ரசிகர்களுக்கு ஹிருத்திக் ரோஷன் வீடியோ அறிக்கை மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி