செய்திகள் கல்லூரி மாணவியை மிரட்டி காருக்குள் உல்லாசமாக இருந்த டிரைவர் பற்றிய திடுக் தகவல்கள்!…

கல்லூரி மாணவியை மிரட்டி காருக்குள் உல்லாசமாக இருந்த டிரைவர் பற்றிய திடுக் தகவல்கள்!…

கல்லூரி மாணவியை மிரட்டி காருக்குள் உல்லாசமாக இருந்த டிரைவர் பற்றிய திடுக் தகவல்கள்!… post thumbnail image
குலசேகரம்:-குமரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தின் அடிப்பகுதியில் காருக்குள் உல்லாசம் அனுபவித்த ஜோடியை திருவட்டார் போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இளம்பெண் போலீசாரிடம் தான் கல்லூரி மாணவி என்றும், அந்தஸ்து உள்ள பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்றால் தற்கொலை செய்வேன் என்று கதறினார். அந்த பெண்ணை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர் தன்னை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து அதனை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி அவ்வப்போது காரில் அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதாகவும், அவரது மிரட்டலுக்கு பயந்து இங்கு வந்ததாக கூறினார். இதையடுத்து மாணவிக்கு அறிவுரை கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.பின்னர், அந்த வாலிபரிடம் விசாரித்த போது கோழிப் போர்விளையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28) என்பது தெரிய வந்தது. டெம்போ டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சில நாட்களில் கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார்.

அப்போது பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் ராஜ்குமார் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க கொண்டு சென்ற போது தப்பி ஓடி விட்டு பின்னர் பிடிபட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன. எனவே இவர் மேலும் பல மாணவிகளுடன் நெருக்கமாக பழகி அதனை வீடியோ எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தற்போது அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 110–வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி