அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!… post thumbnail image
புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு விடுத்தது புதிதான ஒன்றல்ல என்றும், ஏற்கனவே வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு மோடி தனக்கு அழைப்பு விடுத்ததையும் நினைவுபடுத்தியிருந்தார்.

எனினும் தூய்மை இந்தியா திட்டத்தில் தான் இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனாக தான் நான் இருப்பேன் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். மேலும் மோடி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் தரூர் கூறினார். இது கேரள மாநில காங்கிரஸ் கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தரூர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தரூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தலைமையை அவர்கள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சசி தரூர் இன்று நீக்கப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவின் படி சசி தரூர் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி