செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…

‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…

‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!… post thumbnail image
சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் ‘பாகுபலி’. இப்படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வந்தது.

அப்போது குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டுள்ளனர்.தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே ‘பாகுபலி’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இப்படி எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. முதன் முறையாக ஒரு விபத்து ஏற்பட்டது படக் குழுவினரைக் கொஞ்சம் பாதித்துள்ளதாம்.

பொதுவாக சண்டைக் காட்சிகள் என்றாலே விபத்துக்கள் நடப்பது சகஜம்தான். இந்தப் படத்தில் எண்ணற்ற துணை நடிகர்களுடன், சண்டைக் கலைஞர்களுடன் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்தாலும், சமீபத்திய விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவே படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி