செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் சேதுபதியை தொடரும் அன்புத்தொல்லைகள்!…

நடிகர் விஜய் சேதுபதியை தொடரும் அன்புத்தொல்லைகள்!…

நடிகர் விஜய் சேதுபதியை தொடரும் அன்புத்தொல்லைகள்!… post thumbnail image
சென்னை:-‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இப்படி மேலும் சில படங்களிலும் நட்புக்காக நடித்திருக்கிறார். ஆனால் இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம். தனக்கென ஒரு ஹீரோ அங்கீகாரம் வந்து விட்டதால் தொடர்ந்து கெஸ்ட் ரோலில் நடித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கதாநாயகனாக நடிக்கிற படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடிப்போம் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறாராம். இது விஜயசேதுபதி மட்டுமே யோசித்து எடுத்த முடிவில்லையாம் அவரை வைத்து படம் இயக்கும் சில அபிமானத்திற்குரிய டைரக்டர்கள், சொன்ன அட்வைசும் ஒரு காரணமாம்.

அதனால் இப்போது யாராவது நட்பு அடிப்படையில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று விஜயசேதுபதி பக்கம் சென்றாலே, அவர் வேறு பக்கமாக திரும்பிக்கொள்கிறாராம். இருப்பினும் விஜயசேதுபதியை நோக்கி அன்புத்தொல்லைகள் அணிவகுத்து நிற்கின்றதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி