செய்திகள்,திரையுலகம் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நடிகை சன்னி லியோனின் குத்தாட்டம்!…

பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நடிகை சன்னி லியோனின் குத்தாட்டம்!…

பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நடிகை சன்னி லியோனின் குத்தாட்டம்!… post thumbnail image
சென்னை:-நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருந்தார். ஆனால் அந்த பாடலில் சன்னி ஆடியபோது கோடம்பாக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் திரைக்கு வந்தபோது அந்த பாடலும் ஹிட்டாகவில்லை. சன்னியின் ஆட்டமும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

அதனால் புதிய வாய்ப்புகள் இன்றி தெலுங்கு பக்கம் சென்ற சன்னிலியோனுக்கு மஞ்சு மனோஜ், ராகுல் பிரீத் சிங் நடித்துள்ள கரண்ட் தீகா என்ற படத்திலும் தேவதாஸ் பிரேக் அப் -என ஆரம்பிக்கும் ஒரு குத்துப்பாடலில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த பாடலில் பாலிவுட் படங்களில் ஆடுவது போன்று டூ -பீஸ் உடையணிந்து கலக்கியிருக்கிறாராம் சன்னி லியோன்.மேலும், அந்த ஒரு பாடலை படமாக்குவதற்கான மொத்த செலவு ஒன்றரை கோடியாம். தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளிலும் படம் வெளியாகயிருப்பதால், முன்கூட்டியே அந்த பாடலை தொலைக்காட்சியில் வெளியிட்டு பப்ளிசிட்டியை முடுக்கி விடப்போகிறார்களாம்.

சன்னி லியோன் பாடல் காட்சிகளுக்கு எதிர்ப்பு வருவது சாதாரணமான விசயம் என்பதால் இதுவரை படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர் சம்பந்தப்பட்ட பாடல்களை தொலைக்காட்சிகளில் வெளியிட்டதில்லை. ஆனபோதும், அப்படி எதிர்ப்புகள் எதுவும் வராது என்ற நம்பிக்கையில், பப்ளிசிட்டி கருதி அந்த பாடலை முன்பே வெளியிடுகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி