செய்திகள்,திரையுலகம் அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…

அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…

அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திரையுலகில் புதிய வதந்தி பரவி வருகிறது.

அதாவது சூர்யா அஞ்சானில் ராஜுபாய், கிருஷ்ணா என இரண்டு கெட்டப்பில் தோன்றியதைப் போல கத்தி படத்திலும் ஒரே ஆள் இரண்டு கெட்டப்புகளில் தோன்ற உள்ளார் என்று கூறப்படுகிறது. லிங்குசாமியும் படம் வெளிவருவதற்கு முன்பு இரண்டு கதாபாத்திரங்கள் என்று தான் பேட்டியில் கூறியிருந்தார்.அதனால் எது உண்மை என்பது டிரைலர் வந்தால் தான் தெரியும் அல்லது தீபாவளிக்குதான் இந்த வதந்திக்கு முடிவு தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி