உத்தம வில்லன் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்தடுத்து ஐ, காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளியாகலாம் என்கிறார்கள். ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வசந்தபாலன், தன்னுடைய கனவுப் படமாக காவியத் தலைவன் படத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது பட வெளியீட்டில் குருவுடனேயே மோத வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கத்தி, பூஜை படங்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டால் எப்படியும் நவம்பர் இரண்டாவது வாரம் வரை மேற் சொன்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.
தமிழ் நாட்டில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான திரையரங்குகளே உள்ளதாம். கத்தி படம் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், பூஜை சுமார் 300 திரையரங்குகளிலும் வெளியாகலாம் என்கிறார்கள். இந்தப் படங்கள் ஓடி முடிந்தால்தான் அடுத்து நவம்பரில் புதிய படங்களைத் திரையிட வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அதனால், தீபாவளி படங்களின் வரவேற்பைப் பொறுத்தே மற்ற படங்களின் வெளியீடு அமைய வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி