அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!… post thumbnail image
புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட தெண்டுல்கர், தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய குப்பைகளை அகற்றினார். கையில் துடைப்பத்துடன் குப்பைகளை அகற்றி தெருவை சுத்தம் செய்தார். இதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மோடி தனது டூவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

சிறந்த பணியை தெண்டுல்கர் செய்து உள்ளார். அவரது இந்த செயல்பாடு தூய்மை திட்டத்துக்கு பெரும் ஆதரவை பெற்று தரும். இது மற்றவர்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது. அனைவரும் தூய்மை திட்டத்தில் சேருங்கள் என்று கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி