செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!… post thumbnail image
சென்னை:-எம்.ஜி.ஆர்., நடித்த ‘அமரகாவியம்’, ரஜினி நடித்த ‘கர்ஜனை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மாயா. முன்னாள் கவர்ச்சி நடிகையான இவர் இன்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்தார், அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து அதை பறிக்க அந்த பெண் போலீஸ் முயற்சித்தார், ஆனால் மாயா அதற்குள் தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்ற முயற்சி செய்தார். போலீசார் அவரை தடுத்துவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி இப்படி ஒரு தற்கொலை முயற்சி செயலில் ஈடுபட்டிருக்கிறார் மாயா. மேலும் அம்மா வாழ்க என்று கூறியபடி ரோட்டில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அவரை போலீசார் உடனடியாக வந்து அப்புறப்படுத்தினர். மாயாவுடன் மற்றொரு பெண்ணும் உடன் இருந்தார், அவர் மாயாவின் மகள் என்று கூறப்படுகிறது. கமிஷனர் அலுவலகத்தில், நடிகை மாயா தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி