செய்திகள்,திரையுலகம் நடிகர் ஷாரூக்கான் நிகழ்ச்சியை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!…

நடிகர் ஷாரூக்கான் நிகழ்ச்சியை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!…

நடிகர் ஷாரூக்கான் நிகழ்ச்சியை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!… post thumbnail image
சென்னை:-பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர்’. இப்படத்தின் புரொமோஷன் மற்றும் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்த ஷாரூக், பத்திரிகையாளர்களை சுமார் மாலை 4.30 மணியளவில் சந்திப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் அவர் இரவு 8 மணிக்கு தான் நிகழ்ச்சிக்கு வந்தார். இதனால் ஷாரூக்கானுக்காக காத்திருந்த பத்திரிகையாளர்கள் பொறுமை இழந்தனர்.

மேலும் வந்தவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் குறிப்பிட்ட சில டிவி சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தார், ஏற்கனவே தாமதமாக வந்து பத்திரிகையாளர்களின் அதிருப்திக்கு ஆளான ஷாரூக்கின் இந்த செயல் அவர்களை மேலும் வெறுப்படைய செய்தது, இதனால் பத்திரிகையாளர்கள் ஷாரூக்கானை புறக்கணித்தனர். ஷாருக்கான், தான் தனித்தனியாக பேட்டி கொடுக்கிறேன் என்று உத்திரவாதம் அளித்தும் பத்திரிகையாளர்கள் கோபமாக வெளியேறினர். மேலும் நிகழ்ச்சியில் கடும் தள்ளு முள்ளும் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பும் நிலவியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி